நின்று கொண்டே வாழமுடியும்
என்று பச்சை மரங்கள்
உருவமே இல்லாமல்
உலா வர முடியும் என்று காற்று
குண்டு மணி அளவே இருந்தாலும்
கூட்டமாய் வாழ முடியும் என்று எறும்புகள்
ஆம் ! வாழ வேண்டும் என்று
வைராக்கியம் இருந்தால்நீ கூட வாழலாம் மனிதனே !!!
- ரா.கணேஷ்
ஞாயிறு, 26 ஜூலை, 2009
சனி, 25 ஜூலை, 2009
களவு போன புதையல்
ஐந்தாம் வகுப்பில்பெண் பிள்ளைகள் பக்கம்
ராக்கெட் விட்டு
டீச்சரிடம் பிடிபட்டது
என் கையெழுத்தைப் பாராட்டியவளின்
பெயரை இரவுதூக்கத்தில் முணுமுணுத்தது
வாத்தியாரை கிண்டல்
செய்ததால் நூறு தோப்புக்கரணம்
போட்டது
நான் வகுப்பில் அடிவாங்கியதை
பார்த்துவிட்ட தம்பிக்கு
கடலை மிட்டாய் வாங்கித்தந்து
அவனை தாஜா செய்தது
என்று நான் வீட்டில் மறைத்த
பள்ளி குறும்புகளை
எவனோ ஒருவன்
கவிதையாய்
வார இதழில்...!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)