ஞாயிறு, 26 ஜூலை, 2009

நின்று கொண்டே வாழமுடியும்
என்று பச்சை மரங்கள்


உருவமே இல்லாமல்
உலா வர முடியும் என்று காற்று


குண்டு மணி அளவே இருந்தாலும்
கூட்டமாய் வாழ முடியும் என்று எறும்புகள்


ஆம் ! வாழ வேண்டும் என்று
வைராக்கியம் இருந்தால்நீ கூட வாழலாம் மனிதனே !!!


- ரா.கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக